Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலித், தேவர், கவுண்டர் சமூகத்தை தொடர்ந்து சீண்டுவதா? அன்புமணிக்கு கொங்கு மக்கள் முன்னணி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலித்துகள், தேவர் மற்றும் கவுண்டர் சமூகத்தை தொடர்ந்து சீண்டும் வகையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செயல்படுவதாக கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆறுமுகம் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது! இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் நலன் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று அதன் பாதையிலிருந்து தடம் புரண்டு, கொள்கை கோட்பாடுகளை மறந்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் தன் இருப்பை உறுதி செய்து கொள்ளவும், தன் இருப்பை வெளிக் காட்டிக் கொள்ளவும் தரம்தாழ்ந்த அரசியலை முன்னெடுப்பது வேதனையளிக்கிறது! குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் தனது சமூகம் அல்லாத ஒருவர் ஒரு துறையில் ஆளுமையாக உருவாகும் போது அவர்கள் மீது வன்மம் நிறைந்த வசை மொழிகளை கொண்டு அநாகரிகமாக வசை பாடுவதும், அச்சுறுத்துவதும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது!

குறிப்பாக இந்திய அளவில் போற்றத்தக்க நடிகராகவும், கல்வி சேவையாளராகவும் உள்ள திரு.சூர்யா அவர்கள் மீது வன்மத்தை தொடங்கியிருப்பதும், தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு.எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு. ஓ.பண்ணீர்செல்வம் அவர்களை "டயர்நக்கி" என்ற மூன்றாம் தரமனா அருவருக்கத்தக்க ஒரு சொல்லாடாலை பயன்படுத்தி வசைபாடியதோடு, ஊழல் ஆட்சி என்றும் குற்றசாட்டையும் வைத்தார்! திரும்ப அவர்களிடமே சென்று கூட்டணியும் வைத்தனர்! எப்போது அவர்கள் நேர்மையாளராக மாறினார்கள் இவர்களுக்கு? உணர்ச்சிவசப்பட்டு செயலாற்றுவதும், வட மாநிலங்களை போல வன்முறையை நிகழ்த்தி அரசியல் குளிர் காய்வதும் தமிழ் சமூகத்தின் நலனுக்கு உகந்தது அல்ல! அண்ணல் அம்பேத்கர், தீரன் சின்னமலை, பசும்பொன் தேவர் ஐயா புகைப்படம் இருந்தால் ஏற்று கொள்வீர்களா? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளது திரைப்பட குழுவினர் தவறை திருத்தி கொண்ட பின்னும், சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நீக்கிய பின்னும் தொடர்ந்து பேசுவது தலைமை பன்புக்கு உடைய முதிர்ச்சி அல்ல!

சீண்டுகிறார் அன்புமணி

சீண்டுகிறார் அன்புமணி

தாழ்த்தப்பட்ட சமூகம், தேவர் மற்றும் கவுண்டர் சமூகத்தை சீண்டும் வகையில் கருத்து வெளியிடுவதை தவிர்த்திருக்க வேண்டும்! இது போன்ற செயல்களை உலகளாவிய தமிழ் சமூகம் விரும்புவதும் இல்லை! தமிழகத்தில் தமிழ் சமூகம் வன்முறை தவிர்த்து ஒற்றுமையோடு செயல்பட்டால் மட்டுமே உலகளாவிய அரசியல் அரங்கில் தமிழர்களின் நிலையையும் பிற சமூகத்தை போல உயர்த்தி கொள்ள முடியும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் நிதானித்து செயல்படும் சம காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் அதிலிருந்து விலகி வன்மத்தை முன்னிறுத்தி, வெறுப்பை உருவாக்கி, பகையை கூர்தீட்டி அரசியல் செய்வது தமிழர்கள் அனைவருக்கும் தலைகுனிவை உண்டாக்குமே தவிர மேன்மையை அல்ல! இது போன்ற பாமக'வின் செயல்களை வன்னியர்களே விரும்பமாட்டார்கள்! வன்முறையை நிகழ்த்திட வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருப்பதே பாமக'வின் வாடிக்கையாக உள்ளது! பாமக மட்டுமே வன்னியர் சமூகத்தின் பிரதிநிதி அல்ல, அதே சமூகத்தி ல் அந்த மக்களின் அரசியல், பொருளியல் விடுதலைக்காக அறிவுபூர்வமான கருத்தியலை ஊட்டி வன்னியர் சமூக இளைஞர்களை தலைமை பன்போடு உயர்த்தி வரும் அமைப்புகளும், தலைவர்களும் உள்ளனர்.

பாமகவின் போக்கு

பாமகவின் போக்கு

போற்றத்தக்க வகையில் வன்னியர் சமூக இளைஞர்களும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தன் முயற்சியால் முன்னேறியும் வருவதும் போற்றத்தக்கதே! அப்படிப்பட்ட. இளைஞர்கள் உயர் இலட்சியமற்ற குறுகிய அரசியலை வெறுத்தும் வருகின்றனர்! இது போன்ற அந்த சமூக இளைஞர்களின் சீரிய செயல்பாட்டால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை மறைத்து கொள்வதற்காகவும், தங்களது இருப்பை காத்து கொள்ளவும் நிதானமற்ற வகையிலும், சட்டத்திற்கு உட்படாமலும் அவசரகதியில் பாமக செயல்படுவதும் வாடிக்கையாகி விட்டது! கொங்கு வேளாளர்கள் சமூகம் எப்போதும் வன்முறையை தன் நோக்கமாக கொண்ட சமூகம் அல்ல! சட்டத்திற்குட்பட்டு சனநாயக வழியில் தனது கருத்துகளை பதிவு செய்யும் ஒரு பக்குவப்பட்ட சமூகமாகவே இயற்கையாகவே கட்டமைத்து கொண்ட ஒரு பன்பட்ட சமூகமாகவே உள்ளனர். மேலும் பல்வேறு சமூகத்தினரையும் அரவணைத்து வாழும் வாழ்வியல் சூழலை நிலைநாட்டி வரும் சமூகமாகவே உள்ளோம்!

கொங்கு இளைஞரை அச்சுறுத்துவதா?

கொங்கு இளைஞரை அச்சுறுத்துவதா?

அந்த வகையில் ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாமகவினர் கருத்துக்கு முகநூலில் நாகரீகமாக பதிவிட்ட கிருஷ்னகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காட்டேரி பகுதியை சார்ந்த கொங்கு வேளாளர் சமூக இளைஞர் மீது எந்த தவறும் இல்லாத போதும் சாதிய வெறியோடு அந்த இளைஞரை அச்சுறுத்தி மறுப்பு வெளியிட வைத்து இருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள தொழில் நகரங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வாழும் எந்த சமூக மக்களையும் யாரும் பொது சூழல்களை மையப்படுத்தி தனிநபர் தாக்குதலை முன்னெடுப்பதில்லை! இது போன்ற செயல்கள் வட மாநிலங்களில் தான் அதிகம் கானப்படும். அந்த நிலையை பாமக கடந்த சில காலங்களாக தற்போது கையிலெடுத்துள்ளது, தங்கள் சிந்தனைகளுக்கு எதிராக உள்ளவர்களை மிரட்டி, அச்சுறுத்தி, சித்ரவதைகளை செய்து, கானொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரவவிடுவது மோதலை தூண்டும் விதமாகவே உள்ளது.

தமிழ் சமூகத்துக்கு தலைகுனிவு

தமிழ் சமூகத்துக்கு தலைகுனிவு

பாட்டாளி மக்கள் கட்சி என்ற ஒரு அமைப்பின் செயல்பாட்டால் மொத்த வன்னியர் சமூகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்சமூகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது! பாமக'வின் இந்த வன்முறை போக்கை கொங்கு மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது! இது போன்ற செயல்களை முன்னெடுப்பவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்!! இவ்வாறு கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+