சின்னத்திரை படப்பிடிப்பு விவகாரம்... முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் -குஷ்பு
சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளை உரிய நெறிமுறைகளை பின்பற்றி தொடங்குவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நடிகை குஷ்பு கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
குஷ்புவின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், இது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அதன் பின்னர் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான நடிகை குஷ்பு மற்றும் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய குஷ்பு, சின்னத்திரை படப்பிடிப்புகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடங்க தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும், இதற்கான அனுமதி கோருவதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார் என தனக்கு நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
தொலைக்காட்சி சீரியல்களில் கதை கொஞ்சம் மாறக்கூடும் என்றும், ஏனெனில் முன்பை போல் அனைத்து கலைஞர்களையும் வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், மக்களின் நலன் கருதியே சில விவகாரங்களில் அரசு கெடுபிடி காட்டுவதாகவும் கூறினார். கொரோனாவை ஒழிக்க அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் கூட்டம் சேருவதை காணும் போது தனக்கு வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார். இன்னும் சில நாட்களுக்கு ஒவ்வொருவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட தாழ்மையான வேண்டுகோள் எனக் கூறினார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications