கிளாம்பாக்கத்தை விடுங்க.. சென்னையில் திறக்கப்படும் பிரமாண்ட பேருந்து நிலையம்! பயணிகளுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: சென்னையை அடுத்த திருமழிசை குத்தம்பாக்கத்தில் ரூ.427 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. அப்போது நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அதற்குள் திறக்கப்படுமா?என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. நகரில் ஏற்படும் வாகன போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள் நெருக்கம் ஆகியவைகளுக்கு தீர்வு காண வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் சென்னை புறநகர் பகுதிகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய பேருந்து நிலையம்
இதில் குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து வெளியூர்களுக்கும் அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதற்கு தீர்வு காணும் விதமாக சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையம் பிரமாண்டமாக அமைக்கபட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் பராமரிப்பிலும் பக்காவாக இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்கள், சேலம் திருச்சி, கடலூர் என பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்
ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சென்னையை அடுத்த திருமழிசை குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.
24.8 ஏக்கர் நிலத்தில் ரூ. 336 கோடி செலவில் இந்த பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. 5 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்து வரும் இந்த பேருந்து நிலையத்தில், ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள், ரூ.10 கோடியில் பணிமனை, போலீஸ் நிலையம் ஆகியவையும் கட்டப்பட உள்ளன.
ரூ.427 கோடி மதிப்பீட்டில்
இதனால் பேருந்து நிலைய திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக உயர்ந்தது. தற்போது பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் பணிகள் முடிந்துவிட்டன. இதனால் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே நிலவி வருகிறது. இந்த பேருந்து நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் திறக்கப்படுகிறது. எனினும், அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது.
அப்போது நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அதற்குள் திறக்கப்படுமா?என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஐஏஎஸ் அதிகாரிகள் எஞ்சியுள்ள பணிகளை இறுதி கட்ட பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தியுள்ளனர். இந்த பணிகள் முடிந்ததும் திறக்கப்படும் என்று தெரிகிறது.
என்னென்ன வசதிகள் உள்ளன
குந்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை, மெட்ரோ ரயில் நிலையம் போன்று பிரம்மாண்டமாக நவீன வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் திறப்புக்கு பிறகு, இங்கிருந்து தான், பெங்களூர், கிருஷ்ணகிரி போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் 70 பேருந்துகள், தனியார் சேவைகளுக்காக 30 பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகத்தின் 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பேருந்து நிலையத்தில் டிரைவர்கள், கண்டகர்கள் தங்கும் இடம், கடைகள், பைக்குகள் நிறுத்துமிடம், உணவகம், குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளும் மல்டி லெவல் கார் பார்க்கிங்கும் அமைக்கப்பட்டுள்ளன.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications