வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி- வீடியோ

    சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெண் நெஞ்சுவலியால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் பெரும்பாலானோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    Lady died in Chennai after her name is not in voters list

    இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சிசிலி மோரல். இவர் அப்பகுதியில் 54 ஆண்டுகளாக வசித்து வந்தார். மத்திய சென்னை தொகுதிக்குள்பட்ட அவர் அந்தோணியார் பள்ளிக்கு இன்று வாக்களிக்க சென்றார்.

    அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். எனினும் ஒரு பயனும் இல்லாததால் சோகத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

    வாக்களிக்க முடியாத சோகத்தில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதே பகுதியில் 192 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை.

    மாறாக இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததாக புகார்கள் எழுந்தன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+