Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம்.. தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமிபதி ஐஏஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டார். சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

tamil nadu Lakshmipathy IAS tutucorin

தமிழக அரசின் உயர் பொறுப்புகளில் இப்படி அதிரடி மாற்றம் நடந்த நிலையில், தற்போது முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி தற்போது பதவி வகித்து வரும் நிலையில், முதல்வரின் இணை செயலாளராக அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது முதல்வர் இணை செயலாளராக இருக்கும் லட்சுமிபதி ஐஏஏஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு சப் கலெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டதின் 27 வது புதிய ஆட்சியராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டு இருந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். தூத்துக்குடியில் கிட்டதட்ட ஓராண்டு காலமாக திறம்பட பணியாற்றிய லட்சுமிபதி ஐ.ஏ.ஏஸ் தற்போது முதல்வரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+