நிலப்பட்டா மாறுதல்.. பட்டா, பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளணுமா? இதோ சிம்பிள்
சென்னை: ஒரு நிலத்தினுடைய பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை எப்படி அறியலாம் தெரியுமா?
பட்டா என்பது சொந்த வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை வருவாய் துறையே நேரடியாக வழங்குகிறது... இந்த ஆவணத்தில், உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பட்டா மாறுதல் : பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை, பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக நில உரிமையாளர்கள் விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகே பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன.
ஆனாலும், இ-சேவை மையம் மூலம் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுவதாக பொதுமக்கள் கருதினார்கள். அதனால்தான், முதல்வர் ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இணைய சேவை: அந்தவகையில், எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இப்படி இந்த ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கோ, தாலுகா ஆபீசுககோ அலைய வேண்டியதில்லை.. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதலும் உடனடியாக செய்யப்படும். முக்கியமாக இதில் இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை..
அதேபோல, பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால், www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற வெப்சைட்டின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம்.
யார் பெயர்: அதேபோல, ஒரு நிலத்தினுடைய பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா? இதற்கும் ஆன்லைனிலேயே வசதி ஏற்படுத்தி தந்திருக்கிறது நம்முடைய தமிழக அரசு..
- https://tnreginet.gov.in/ என்ற அதிகாரபூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் "வில்லங்க சான்றிதழ்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு வில்லங்க சான்று விவரங்கள் பார்வையிடுதல் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.. இப்போது ஸ்கிரீனில் ஒரு பக்கம் தோன்றும். அதில் வில்லங்கச் சான்று என்பதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்.
- "திருத்த இயலாநிலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களின் பத்திரம் ஸ்கிரீனில் தோன்றும். அதில் பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை நீங்களே நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளலாம்












Click it and Unblock the Notifications