உடையில் மாற்றம்.. அனைத்து வழக்கறிஞர்களும் இனி வெள்ளை நிற ஆடை அணிய உத்தரவு
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆஜராகும் அனைத்து வழக்கறிஞர்களும் இனி வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும் என தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, கொரோனா வைரஸை ஈர்க்கும் தன்மை கருப்பு நிற அங்கிக்கு இருப்பதால் வழக்கறிஞர்கள் உடை மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிர்வாக உத்தரவின் காரணமாக, உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றம், தீர்ப்பாயம், ஆணையங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இனி கருப்பு அங்கிகள்/புடவை அணிவதை தவிர்த்து, ஆண் வழக்கறிஞர்கள் வெள்ளை நிற சட்டையும், பெண் வழக்கறிஞர்கள் வெள்ளை நிற புடவையும், சல்வார் கமீஸ் அணிந்து பங்கேற்க வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை கருப்பு நிற அங்கிகள் அணிவதை தவிர்த்து, புதிய உத்தரவை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications