கருணாநிதி நினைவிடத்தில் குவிந்த சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள்.. மலர் தூவி அஞ்சலி!
சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சோனியா, ராகுல் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
Recommended Video

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சோனியா, ராகுல் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. அவருக்கு அருகே திமுக தலைவர் அண்ணாவின் சிலை திறக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தலைவர்கள் அனைவரும் மெரினா வந்தடைந்தனர். விழாவில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் மெரினா வந்தடைந்தனர்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தேசிய தலைவர்களின் அஞ்சலி #StatueOfKalaignar https://t.co/7mx78vWiYB
— M.K.Stalin (@mkstalin) December 16, 2018
மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் சோனியா, ராகுல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். எம்.பி கனிமொழி காங். மூத்த தலைவர்கள் ப.சிதம்பம், நாராயணசாமி, தங்கபாலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களுடன் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications