என்னது.. கள்ளக்குறிச்சியில் தோற்ற சுதீஷூக்கு ராஜ்ய சபா சீட்டா?
ராஜ்ய சபா சீட்டுக்காக டெல்லியில் எல்கே சுதீஷ் முகாமிட்டு வருகிறார்.
Recommended Video
சென்னை: ஆசை யாரை விட்டது.. ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியலேன்னாலும், ராஜ்ய சபா சீட் தருவார்களா என்று தேமுதிக தரப்பு முயற்சி செய்து வருகிறது.
அதிமுகவுடன் வந்து கூட்டணி வைத்திருந்தால் இருக்கும் மரியாதையாவது தப்பி இருக்கும். ஆனால் சீட் பேரம் பேசி, தன் இமேஜை கெடுத்து கொண்டதுடன், பாஜக, அதிமுக இமேஜையும் டேமேஜ் செய்துவிட்டது தேமுதிக.
பாமகவுடன் போட்டி போட்டுக் கொண்டு சீட் கேட்டதற்கு காரணம், வட மாவட்டங்களில் தங்களுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்ற நினைப்பால்தான். ஆனால் ரெண்டு தரப்புமே வெற்றி பெறவில்லை.

சிக்கல்
இருந்தாலும் பாமக அப்போது ராஜ் சபா சீட்டுக்காக ஒப்பந்தமே போட்டுவிட்டது என்பதால், இப்போது அந்த வாய்ப்பு அந்த கட்சிக்கு அதாவது அன்புமணிக்கு இல்லை என்று சொல்ல முடியாது. அதனால் அவருக்கு ராஜ்யசபா சீட் தருவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.

அன்புமணி
இருந்தாலும், தருமபுரியில்கூட அன்புமணி ஜெயிக்கவில்லையே என்ற ஆதங்கம் அதிமுக, பாஜகவுக்கு இருக்கத்தான் செய்யும். அதுவும் இல்லாமல் பாமக தோற்றாலும், வாக்கு வங்கியை பலமாக வைத்துள்ளது. இந்த ஒன்றை காரணம் காட்டியும், அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்தானதை முன்னிறுத்தியும் அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.

நெருக்கம்
ஆனால், தேமுதிக தங்களுக்கு ஒரு ராஜ்ய சபாசீட் கேட்கிறதாம். இதற்காக 2 நாட்களாக டெல்லியில் சுதீஷ் முகாமிட்டுள்ளாராம். பாஜக மேலிடத்து நபர்களுடன் தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கம் வைத்துள்ளவர் சுதீஷ். விஜயகாந்த் அமெரிக்காவுக்கு போயிருந்த சமயத்திலும் சரி, திரும்பி வந்ததில் இருந்தும் சரி, பாஜக நெருக்கத்தை அவர் குறைத்து கொள்ளவில்லை. இதை வைத்து ராஜ்ய சபா சீட் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ளாராம்!

பாமகவுடன் போட்டி?
ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை, வாக்கு வங்கியையும் பலப்படுத்தி கொள்ளவில்லை, இனி கட்சியை எப்படி காப்பாற்றுவது என்பதை பற்றி யோசிக்கவில்லை.. ஆனால் சீட் மட்டும் வேண்டும் என்று கேட்பது நியாயமா என்பதை தமிழக மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். ஒன்று மட்டும் தெரிகிறது.. டெல்லியில் முகாமிடுவதை பார்த்தால், பாமகவுடன் இன்னும்கூட போட்டிக் கொண்டுதான் இருக்கிறது தேமுதிக!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications