நாளை 3 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷி!
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஜனவரி 28) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அதேபோல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களுக்கு வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவப்பூர் முத்து மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், பிப்ரவரி மாதம் ஒரு சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு நாளை, ஜனவரி 28 ஆம் தேதி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் தமிழகத்தின் முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை அறிவிக்கப்பட்டு உள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 7 ஆம் தேதி வழக்கமான வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கல்வி நாட்களில் எந்தவித குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், பக்தர்களால் 'தென் திருப்பதி' என அழைக்கப்படும் மிக முக்கியமான திருத்தலம். கரூர் - திண்டுக்கல் சாலையில், குஜிலியம்பாறை செல்லும் வழியில் உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோயில்.
இந்நிலையில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், அதே நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications