Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை 3 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஜனவரி 28) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அதேபோல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களுக்கு வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Local Holiday Declared in Pudukkottai Thiruvarur karur on Jan 28 for Temple festivals

திருவப்பூர் முத்து மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், பிப்ரவரி மாதம் ஒரு சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு நாளை, ஜனவரி 28 ஆம் தேதி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் தமிழகத்தின் முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் நாளை அறிவிக்கப்பட்டு உள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 7 ஆம் தேதி வழக்கமான வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கல்வி நாட்களில் எந்தவித குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், பக்தர்களால் 'தென் திருப்பதி' என அழைக்கப்படும் மிக முக்கியமான திருத்தலம். கரூர் - திண்டுக்கல் சாலையில், குஜிலியம்பாறை செல்லும் வழியில் உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோயில்.

இந்நிலையில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், அதே நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+