நாளை 3 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷி!
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஜனவரி 28) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அதேபோல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களுக்கு வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவப்பூர் முத்து மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், பிப்ரவரி மாதம் ஒரு சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு நாளை, ஜனவரி 28 ஆம் தேதி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் தமிழகத்தின் முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை அறிவிக்கப்பட்டு உள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 7 ஆம் தேதி வழக்கமான வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கல்வி நாட்களில் எந்தவித குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், பக்தர்களால் 'தென் திருப்பதி' என அழைக்கப்படும் மிக முக்கியமான திருத்தலம். கரூர் - திண்டுக்கல் சாலையில், குஜிலியம்பாறை செல்லும் வழியில் உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோயில்.
இந்நிலையில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், அதே நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications