Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாகன ஓட்டிகளே.. போக்குவரத்து விதிமீறல் அபராதங்களுக்கு தள்ளுபடி பெற ஒரு அரிய வாய்ப்பு! நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை முழுவதுமாக தள்ளுபடி அல்லது 50% வரை தள்ளுபடி பெறலாம். ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காமல் சென்றது உள்ளிட்ட 13 வகையான விதி மீறல் வழக்கு அபராதங்களில் தள்ளுபடி பெறலாம்.

தேசிய லோக் அதாலத் செப்டம்பர் 13, 2025 அன்று நடைபெறும். அப்போது நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு முழுமையாக தள்ளுபடி பெறலாம் அல்லது 50% வரை குறைக்கலாம். லோக் அதாலத் சிறிய முதல் பெரிய அபராதங்களை குறைந்த செலவில் தீர்க்க அல்லது அவற்றை ரத்து செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், சில கடுமையான போக்குவரத்து மீறல்கள் பரிசீலிக்கப்படாது.

Lok Adalat on Sept 13 Settle Pending Traffic Challans with Possible Waivers and Reductions

தள்ளுபடி பெற தகுதியான சிறிய போக்குவரத்து விதிமீறல்கள்

  1. சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்
  2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்
  3. ரெட் சிக்னலை மீறுதல்
  4. தவறாக வழங்கப்பட்ட சலான்
  5. அதிக வேகம்
  6. பி.யூ.சி சான்றிதழ் இல்லாதது
  7. நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்துதல்
  8. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
  9. வாகன தகுதிச் சான்றிதழ் வைத்திருக்காதது
  10. தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல்
  11. போக்குவரத்து சிக்னல்களைப் புறக்கணித்தல்
  12. நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

தள்ளுபடிக்கு தகுதியற்ற சலான்கள்

லோக் அதாலத் கடுமையான மீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்காது.

  1. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
  2. விபத்து வழக்குகள்
  3. கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட மரணம்
  4. சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல்
  5. அங்கீகரிக்கப்படாத ரேஸ்
  6. குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள்
  7. நீதிமன்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்கள்
  8. பிற மாநிலங்களில் வழங்கப்படும் அபராத சலான்கள்

லோக் அதாலத்தில் பங்கேற்க, மக்கள் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, ஒரு டோக்கன் எண் மற்றும் சந்திப்பு கடிதம் வழங்கப்படும், அதில் ஆஜராவதற்கான தேதி மற்றும் நேரம் இருக்கும். விசாரணை நாளில், சந்திப்பு கடிதம், டோக்கன் மற்றும் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

லோக் அதாலத்: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

  1. தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  2. லோக் அதாலத்துக்கு ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  4. மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாக டோக்கன் எண்ணைப் பெற படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

விசாரணை நாளில் டோக்கன் எண் வரிசைப்படி அழைக்கப்படுவார்கள். போக்குவரத்து அபராதம் தொடர்பான வழக்கு என்றால், விண்ணப்பதாரர்கள் அசல் வாகன ஆவணங்கள் மற்றும் சலான் விவரங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

லோக் அதாலத்தில் தீர்க்கப்படக்கூடிய பிற வழக்குகள்

போக்குவரத்து வழக்குகளுடன், குடும்ப தகராறுகள், சொத்து விவகாரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பிற சிறிய நீதிமன்ற வழக்குகள் போன்ற சிவில் வழக்குகளையும் லோக் அதாலத் விசாரிக்கும். நீதிபதிகள் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டு, உத்தரவு பிறப்பித்த பிறகு வழக்கை முடித்து வைப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+