பஸ் வருமா? வராதா? 20 மணி நேரமாக காத்திருந்த மக்கள்.. கோயம்பேட்டில் வெடித்த போராட்டம்!
சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்காத காரணத்தால் தற்போது சென்னை கோயம்பேட்டில் பயணிகள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களுக்கு சரியாக பேருந்து வசதி செய்து கொடுக்காத காரணத்தால் தற்போது சென்னை கோயம்பேட்டில் பயணிகள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், தமிழகத்தில் பயணிகளுக்கு சரியான பேருந்து வசதி செய்து கொடுக்கப்படாத பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு தமிழக அரசு சார்பாக போதிய பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

பல பயணிகள்
பல பயணிகள் இதுவரை படியில் தொங்கியும், பேருந்தின் மேல் கூரையில் உட்கார்ந்து கொண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்கள். மிகவும் மோசமான வகையில், ஆபத்தான நிலையில் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்து இருக்கிறார்கள்.

சென்னை என்ன
அதே சமயம் சென்னையில் நேற்று மாலை 6 மணியில் இருந்து இன்னும் பல பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல காத்து இருக்கிறார்கள். 20 மணி நேரம் ஆகியும் இன்னும் இவர்கள் ஊருக்கு செல்வதற்கு பஸ் வரவில்லை. நேற்று மாலை ஊருக்கு செல்ல முயன்று இன்று காலை வரை பஸ் கிடைக்கமால் பல பயணிகள் பேருந்து நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள்.

மோசமான நிலை
தற்போது அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து எப்போது வரும் என்று தெரியாமல் பெரிய குழப்பத்தில் உள்ளனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். ஏற்கனவே பெருங்களத்தூரில் தனியாக மக்கள் போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லை
அதே சமயம் நேற்று இரவு பேருந்து பிடித்த மக்களே இன்னும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மோசமான பேருந்துகளை தேர்தலுக்காக தமிழக அரசு பயன்படுத்தி வருவதால், மக்கள் சொந்த ஊருக்கு செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications