எனக்கு தமிழ் தெரியாது! படிச்சு காட்டுங்க ப்ளீஸ்! பதற விட்ட நாம் தமிழர் வேட்பாளர்! சீமானுக்கு சோதனை
சென்னை: தமிழ் படிக்கத் தெரியாததால், தேர்தல் அலுவலரின் உதவியை விருதுநகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளசிக் நாடியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னை பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

மொத்தம் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் பல முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1. திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்,
2. வடசென்னை - டாக்டர் அமுதினி
3. தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி
4. மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்
5. திருப்பெரும்புதூர் - டாக்டர் வெ.ரவிச்சந்திரன்
6. காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்
7. அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்
8. வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்
9. தருமபுரி - டாக்டர் கா.அபிநயா
10. திருவண்ணாமலை - டாக்டர் ரா.ரமேஷ்பாபு
11. ஆரணி - டாக்டர் கு.பாக்கியலட்சுமி
12. விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்
13. கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்
14. சேலம் - டாக்டர் க. மனோஜ்குமார்
15. நாமக்கல் - க.கனிமொழி
16. ஈரோடு - டாக்டர் மு.கார்மேகன்
17. திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி
18. நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்
19. கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்
20.பொள்ளாச்சி - டாக்டர் நா.சுரேஷ் குமார்
21. திண்டுக்கல் - டாக்டர் கைலைராஜன் துரைராஜன்
22. கரூர் - டாக்டர்ரெ.கருப்பையா
23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்
24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி
25. கடலூர் - வே.மணிவாசகன்
26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி
27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்
28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா
29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்
30. சிவகங்கை - வி.எழிலரசி
31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி
32. தேனி - டாக்டர் மதன் ஜெயபால்
33. விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்
34. ராமநாதபுரம் - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்
35. தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்
36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்
37. திருநெல்வேலி - பா.சத்யா
38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்
39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்
40. புதுச்சேரி - டாக்டர் ரா.மேனகா என மொத்தம் 40 பேர் போட்டியிட உள்ளனர்.
வேட்புமனு தாக்கல்; தற்போது நாம் தமிழர் நிர்வாகிகள் அடுத்தடுத்து வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் படிக்கத் தெரியாததால், தேர்தல் அலுவலரின் உதவியை விருதுநகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளசிக் நாடியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் உறுதிமொழி முழுவதையம் தேர்தல் அதிகாரி ஜெயசீலன் படித்து காட்ட அதை கவுசிக் மீண்டும் கூறினார். இவர் ஓமன் நாட்டில் படித்தவர் என்பதால் இவருக்கு தமிழ் தெரியாது. இதனால் கெளசிக் தமிழ் படிக்க தெரியாமல் நேற்று திணறினார்.











Click it and Unblock the Notifications