எதுவும் பேச மாட்டார்.. விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய மாட்டார்.. தேமுதிக சுதீஷ் பகீர் அறிவிப்பு!
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதுவும் பேசமாட்டார் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு இடங்களை பெற்று உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நான்கு வேட்பாளர்களை தேமுதிக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுக இடங்கள்
தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தனது பேட்டியில், அதிமுகவிடம் நாங்கள் இந்த கூட்டணியில் 8 இடங்களும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது நாங்கள் கேட்கும் 4 தொகுதியை கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் கேட்கும் தொகுதி எங்களுக்கு கிடைத்து இருக்கிறது.

பாஜக கோரிக்கை
பாஜகவிடம் நாங்கள் சில கோரிக்கைகள் வைத்து இருக்கிறோம். பாஜக ஆட்சி அமைத்த பின் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவோம். சில முக்கிய கோரிக்கைகளுடன்தான் இந்த கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.

பாமக என்ன
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் விஜயகாந்தை சந்தித்தனர். இரண்டு கட்சி தொண்டர்கள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் இதனால் தேர்தலில் இணைந்து பணியாற்ற முடியும். இது எங்களுக்கு பலம் அளிக்கும்.

திமுக கூட்டணி
தி.மு.க.வினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி விட்டனர். கூட்டணி குறித்தெல்லாம் அவர்கள் அப்படி பேசி இருக்க கூடாது. அவர்கள்தான் எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக பேசினார்கள். ஆனால் இப்போதும் துரைமுருகன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அரசியலுக்காக அந்த நட்பு மாற்றம் அடையாது.

எதுவும் பேச மாட்டார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார கூட்டங்களுக்கு வருவார். சுற்றுப்பயணங்கள் சிலவற்றில் கலந்து கொள்வார். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேச மாட்டார். பிரச்சார கூட்டங்களில் அவர் எதுவும் பேச மாட்டார். தேமுதிகவின் மற்ற தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள் என்று சுதீஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications