வங்கக்கடலில் நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக வலுப்பெறுவது எப்போது? மேஜர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகும் என கூறப்பட்டு இருந்த நிலையில் நாளை தென்கிழக்கு வங்க கடலில் நாளை காலைக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காலம் துவங்கிவிட்டது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆனால் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் கத்தரி வெயிலின் பிடியில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தென்கிழக்கு வங்ககடலில் வளிமண்ட கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இது தொடர்ந்து நாளைக்குள் அதேபகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9 ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து புயலாகவும் வலுப்பெற உள்ளது. தற்போதைய இந்த வானிலை மாற்றம் காரணமாக இன்றும், ,நாளையும் தமிழகம் மற்றும் பிறபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் பட்சத்தில் அதற்கு மோக்கா என பெயரிடப்பட உள்ளது. அநேகமாக இந்த புயல் மே 7 மற்றும் மே 9 ஆம் தேதி இடையில் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புயல் நாட்டின் கிழக்கு கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புயல் சின்னம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களையும் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*****












Click it and Unblock the Notifications