அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.. குட்நியூஸ் சொன்ன வானிலை மையம்
சென்னை: அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும். இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடையும்.

அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். 24 மணி நேரத்தில் குமரி, நாகை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம், அரியலூர், கடலூர், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 16-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவநிலை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பருவமழையால் தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட இடங்களில் மழையை தரும். சென்னையிலும் மேகக் கூட்டங்கள் குழுமியுள்ளதால் மழை பெய்யுமா என்பதை இன்னும் ஓரிரு நாளில் தெரியும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications