ரொம்ப ஸ்பெஷல்.. மன் கி பாத் உரையில்.. சென்னை "லைட்-ஹவஸை" புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
சென்னை: பிரதமர் மோடி இன்று தனது மன் கி பாத் உரையில் சென்னையில் இருக்கும் கலங்கரை விளக்கத்தை பாராட்டினார்.
பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம்.இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்.
இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார். இந்த நிலையில் இன்றும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மோடி பேச்சு
பிரதமர் மோடி தனது பேச்சில், பள்ளி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மிகவும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். தேர்வை பற்றி கவலையின்றி மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். நாடு முழுக்க மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் திறமைகள் ஒளிந்து இருக்கின்றன.

திறமை
இது போன்ற திறமைகளை வெளியே கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் பல வயதானவர்கள், 100 வயதை தாண்டியவர்கள் கூட தடுப்பூசியை போட்டுக்கொள்கிறார்கள்.கொரோனா தடுப்பூசி திட்டம் வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

தடுப்பூசி
வேகமாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் கலங்கரை விளக்கம் மிகவும் பழமையானது. இதை மிகப்பெரிய சுற்றுலாதளமாக மாற்ற வேண்டும். அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது .

தனித்துவம்
இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் தனித்துவமான கலங்கரை விளக்கம் சென்னையில் உள்ளதுதான். உலகம் முழுக்க சுனாமியால் பலர் இதுவரை பலியாகி உள்ளனர். தமிழகத்திலும் கூட சுனாமி தாக்குதல்கள் நடந்துள்ளன. இவர்களை மதிக்கிறேன், அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications