Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதன்பாபுவின் உயிரை பறித்த புற்றுநோய்.. மக்களை சிரிக்க வைத்த நடிகரின் கடைசி நாட்களில் நடந்த சோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மதன் பாப் என்ற மதன் பாபு இன்று காலமானார். அவரது உயிரை புற்றுநோய் இன்று பறித்துள்ளது. இதனை அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மதன் பாப் என்ற மதன் பாபு. 100க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

madhan-bob-no-more-actor-madhan-babu-died-due-to-cancer

தமிழ் சினிமாவில் நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். குறிப்பாக நடிகர் கமல்ஹாசனின் வசூல் ராஜா எம்பிபிஎஸ்,விஜயின் பரண்ட்ஸ், நடிகர் அஜித் குமாரின் வில்லன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நிலைத்து நின்றார். இந்த சிரிப்புக்காகவே அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணிகளையும் செய்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அசத்த போவது யாரு? என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார்.

இந்நிலையில் தான் மதன் பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. சென்னை அடையாறு இல்லத்தில் மதன் பாபு வசித்து வந்தார். இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் மதன் பாபு இன்று மாலை 5 மணிக்கு காலமானார். இதற்கிடையே தான் தற்போது இன்னொரு சோகமான தகவல் வெளியாகி உள்ளது.

மதன் பாபு புற்றுநோய் பாதித்து இறந்துள்ளாராம். சமீபத்தில் மதன் பாபுவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இன்று அவரது உடல்நிலை மோசமாகி உள்ளது. மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காத நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது. இதனை அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் மதன் பாபுவுக்கு சின்னத்திரையில் சமீபத்தில் கூட நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் உடல்நலனை காரணம் காட்டி அவர் நடிக்கவில்லை என்று அவரது நெருங்கிய நண்பரான நடிகர் தியாகு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மதன் பாபுவின் உடல் தற்போது சென்னை அடையாறு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்பிறகு நாளை மதன் பாபுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் நாளை பிற்பகல் 1 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். மதன் பாபுவின் மனைவி பெயர் சுசிலா. இவர் பாடகி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+