எடப்பாடி பழனிசாமிக்கு குஷி.. அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Madras HC Stays Defamation Trial Against EPS Grants Personal Appearance Exemption

கோவை விமான நிலையத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி முன்னாள் எம்.பி கே. சி. பழனிச்சாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு விளக்கம் அளித்த நீதிபதி, நான்கு வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி கே சி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+