எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு.. இடைக்கால தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தயாநிதி மாறன் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications