சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு அனுமதி! அப்போ சுந்தரி அக்கா உணவகம்?
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1417 கடைகள் இருந்த நிலையில் 300 கடைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அனுமதி கொடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்தக் கடைகளுக்கும் அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரையின் இயல்பான தன்மையைப் பாதுகாப்பதே இந்த முக்கிய உத்தரவின் நோக்கமாகும்.

மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு, கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி மெரினா கடற்கரையை நேரில் ஆய்வு செய்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையின் ஒரு பகுதி ஏற்கனவே நீலக்கொடி சான்று பெற்றுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இரண்டு பகுதிகளை இச்சான்றிதழுக்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுதவிர, தலைவர்கள் நினைவிடங்களுக்குப் பின்னால் உள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அச்சான்றிதழ் பெறும் பகுதிகளில் எந்தவிதமான கடைகளுக்கும் அனுமதி இல்லை என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியின் பின்புறம் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உலகில் வேறு எந்தக் கடற்கரையிலும் மெரினாவைப் போல இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கடைகள் இல்லை என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
கடலின் அழகை மறைக்கும் வகையில் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் அதை ரசிக்க முடிவதில்லை. எனவே, தற்போதுள்ள 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
"உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், மற்ற கடைகள் தேவையில்லை" என நீதிபதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டனர். கடற்கரை மக்களின் ரசனைக்கானதே தவிர, அதை வணிக வளாகமாக மாற்ற முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையை இடையூறின்றி ரசிப்பதை கடைகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் அளித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அந்த வகையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அதுவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். தலா 100 கடைகள் வீதம் பொம்மைகள், ஃபேன்சி, உணவகம் ஆகிய கடைகளுக்கு அனுமதி கொடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம் கடற்கரைகளில் கடைகளுக்கு எந்த தடையும் இல்லை.
இந்த நிலையில் மெரினாவில் இயங்கி வந்த சுந்தரி அக்கா கடைக்கும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது. இந்த கடையில் குறைந்த விலையில் தரமான அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சுந்தரி அக்கா கடை மீன் குழம்பு, மீன் வறுவல் உள்ளிட்ட கடல் சார்ந்த உணவுகளுக்கு மிகவும் பிரபலமாகும். இந்த கடைக்கு 2019ஆம் ஆண்டு FSSAI சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுந்தரி அக்கா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications