Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு அனுமதி! அப்போ சுந்தரி அக்கா உணவகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1417 கடைகள் இருந்த நிலையில் 300 கடைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அனுமதி கொடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்தக் கடைகளுக்கும் அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரையின் இயல்பான தன்மையைப் பாதுகாப்பதே இந்த முக்கிய உத்தரவின் நோக்கமாகும்.

Marina shops

மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு, கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி மெரினா கடற்கரையை நேரில் ஆய்வு செய்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையின் ஒரு பகுதி ஏற்கனவே நீலக்கொடி சான்று பெற்றுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இரண்டு பகுதிகளை இச்சான்றிதழுக்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதுதவிர, தலைவர்கள் நினைவிடங்களுக்குப் பின்னால் உள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அச்சான்றிதழ் பெறும் பகுதிகளில் எந்தவிதமான கடைகளுக்கும் அனுமதி இல்லை என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியின் பின்புறம் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உலகில் வேறு எந்தக் கடற்கரையிலும் மெரினாவைப் போல இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கடைகள் இல்லை என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

கடலின் அழகை மறைக்கும் வகையில் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் அதை ரசிக்க முடிவதில்லை. எனவே, தற்போதுள்ள 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

"உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், மற்ற கடைகள் தேவையில்லை" என நீதிபதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டனர். கடற்கரை மக்களின் ரசனைக்கானதே தவிர, அதை வணிக வளாகமாக மாற்ற முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையை இடையூறின்றி ரசிப்பதை கடைகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் அளித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அந்த வகையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அதுவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். தலா 100 கடைகள் வீதம் பொம்மைகள், ஃபேன்சி, உணவகம் ஆகிய கடைகளுக்கு அனுமதி கொடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம் கடற்கரைகளில் கடைகளுக்கு எந்த தடையும் இல்லை.

இந்த நிலையில் மெரினாவில் இயங்கி வந்த சுந்தரி அக்கா கடைக்கும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது. இந்த கடையில் குறைந்த விலையில் தரமான அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சுந்தரி அக்கா கடை மீன் குழம்பு, மீன் வறுவல் உள்ளிட்ட கடல் சார்ந்த உணவுகளுக்கு மிகவும் பிரபலமாகும். இந்த கடைக்கு 2019ஆம் ஆண்டு FSSAI சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுந்தரி அக்கா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+