விவசாய இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இடமில்லை.. சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அந்தச் சமயத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆரம்பாக்கம் கிராமத்தில் இருக்கும் யாழினி நகர் அமைந்துள்ளது விளை நிலம் என்பதால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை தெரிவித்தார். மேலும், சட்ட விதிகளின்படியே உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.











Click it and Unblock the Notifications