பண மோசடி வழக்கு! அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.
அந்த சமயத்தில் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மாற்றம் நடத்துநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி, செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாகச் சென்னை மத்திய குற்றப் பிரிவில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு
இது தொடர்பான வழக்கு எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதே விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் செந்தில் பாலாஜியை 2021ஆம் ஆண்டு முதல் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக மத்திய குற்றப் பிரிவு போலீசார் பதிவு செய்த 3 வழக்குகள் தொடர்பான ஆணவங்களை வழங்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தள்ளுபடி
இந்த மனுவை முதலில் விசாரித்த எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் இதைத் தள்ளுபடி செய்தது. இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து அமலாக்கப் பிரிவினர் மேல்முறையீடு செய்தனர். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் - எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், உரிய ஆய்வுக்குப் பின்னர் ஆவண நகல்களை வழங்க உத்தரவிட்டது.

சம்மன்
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்தனர். இந்தச் சூழலில் தான் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. குற்றஞ்சாட்டப்பட்ட சண்முகம் வரும் 9ம் தேதியும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 12ஆம் தேதியும், அமைச்சர் செந்தில் பாலாஜியை 13ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது.

புதிய மனு
இதனிடையே குற்றஞ்சாட்டப்பட்ட சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஏற்கனவே ஆவணங்களை அளிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வழக்கு விசாரணை எதற்கு நடைபெறுகிறது என்று விளக்கம் கேட்டு அமலாக்கத்துறைக்கு எழுதி கடிதத்திற்குப் பதில் கிடைக்கவில்லை என்பதால் இந்த சம்மனுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இடைக்காலத் தடை
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வு விசாரணை செய்தது. குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
-
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications