மலைக்க வைக்கும் சித்த மருத்துவம்.. குழந்தையின்மையைப் போக்கும் அரிய மருத்துவம்
சென்னை: மூலிகை மருத்துவம்.. இதை இப்போது அதிகம் பேர் நாட ஆரம்பித்துள்ளனர். கசப்பு மருந்துகளைச் சாப்பிட்டு சாப்பிட்டு அதில் நோய் தீராத பலரும் இப்போது சித்த மருத்துவம் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் எழுதி வைத்த மருத்துவம் நாடியை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர்கள் சொல்லி வைத்த மூலிகை மருந்துகள் இன்றளவும் பொருத்தமானதாக உள்ளது.
இடையில் என்னென்னவோ மருத்துவ முறைகள் வந்தததால் தமிழர்கள் திசை மாறிப் போய் விட்டனர். ஆனால் சித்த மருத்துவத்தில் அத்தனை அருமைாயன மருத்துவ முறைகள் உள்ளன. தீராத நோய்களைத் தீர்க்கும் குணம் பலம் சித்த மருத்துவத்தில மூலிகைகளுக்கு உண்டு.
மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் முனைவர் வீ நம்மாழ்வார் சித்த மருத்துவத்தை பரப்பி வருவதில் முக்கியமானவர். அககத்தியர் மூலிகை ஆய்வகத்தை நிறுவி நடத்தி வருபவர். இவர் சமீபத்தில் கோவையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு சித்த மருத்துவத்தில் நோய் கண்டறிதலும், மூலிகை பயன்பாடும் என்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தனது பேச்சின்போது குழந்தையின்மையால் அவதிப்படுவோருக்கான அரிய மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். கோவை வன மரபியல் அலுவலகம் வன விரிவாக்க மையத்தின் உதவியுடந் நடந்த 207வது கருத்தாய்வுக் கூட்டம் இது.
கோயமுத்தூர் மாவட்ட வன அலுவலர் டி வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை வன மரபியல் துணை வன பாதுகாவலர் முனைவர் பு.செ. அர்ச்சனா தலைமையுரை ஆற்றினார்.
பெரும் திரளானோர் கலந்து கொண்டு முனைவர் வீ. நம்மாழ்வார் எடுத்துரைத்த அரிய தகவல்களைக் கேட்டு பயன் பெற்றனர்.