மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. ஆக.1 முதல் மீண்டும் விண்ணப்ப படிவம்.. தமிழக அரசு தகவல்
சென்னை: வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. பிறகு விண்ணப்பங்கள் கொடுப்பது நிறுத்தப்பட்டு 24 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், விடுபட்டவர்களுக்காக மீண்டும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும். அதாவது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பின்னர் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் முதல் மீண்டும் விண்ணப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications