Maha Shivaratri: சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி வழிபாடு.. அதிகாலை வரை சிறப்பு அபிஷேகம்
சென்னை: இன்று மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தமிழகம், புதுவையில் உள்ள சிவன் கோயில்களில் இன்று இரவு முழுவதும் 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ராமேஸ்வரம், திருவண்னாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம், சிதம்பரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மகா சிவராத்திரி நாளான இன்று சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி சிவனை வழிபாடு செய்த நாளே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் சிவன் கோயில்கள் திறந்து இருக்கும். சிறப்பு அபிஷேங்கள் நடைபெறும். நான்கு கால அபிஷேகம் நடைபெறும். சிவராத்திரி விழித்து இருந்து சிவனை வழிபட்டால் , சகல பாக்கியங்களும் கிடைக்கும். மன அமைதி, நோய் நீங்குதல், பாவ மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் சிவன் கோயில்களில் இன்று பகதர்கள் கூட்டம் அலைமோதும். சென்னையில் உள்ள கங்காதீஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சைதாபேட்டை காரணீஸ்வரர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேங்கள் நடைபெறும்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் விரிவான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்களில் இன்று இரவு சிறப்பு அபிஷேகங்கள் நடைறும்.












Click it and Unblock the Notifications