சென்னை திநகர் டாக்டர் வீட்டில் 90 பவுன் நகை திருடிய விஜயலட்சுமி.. வேலைக்கார பெண் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை தியாகராய நகரில் டாக்டர் வீட்டில் வேலை செய்த வேலைக்கார பெண் 90 பவுன் நகைகளை கொள்ளையடித்திருக்கிறார்.. அவரை எப்படி போலீசார் கண்டுபிடித்து கைது செய்தார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் சில நேரங்களில் உரிமையாளர்கள் வீட்டில் உள்ள நகை, பணம் பொருட்களை திருடுவது நடக்கிறது. மிகவும் உரிமையாக பழகும் உரிமையாளர்களிடம், மனசாட்சி இல்லாமல் சில வேலைக்காரர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். தாங்கள் சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசையில் வீட்டின் உரிமையாளர்களின் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள்.. சென்னை தியாகராய நகரில் டாக்டர் வீட்டில் ஒரு வேலைக்கார பெண் கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மாட்டியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..

சென்னை தியாகராயநகர் சாரங்கபாணி தெருவில் 32 வயதாகும் டாக்டர் பங்கஜ் குமார் வசித்து வருகிறார். பங்கஜ் குமார் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். அண்மையில் கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பங்கஜ் குமாரின் மனைவி திட்டமிட்டிருக்கிறார்.. திருமணத்திற்கு போகும் போது தான் சேர்த்து வைத்திருந்த அனைத்து நகைகளை அணிவதற்காக பீரோவை திறந்து தேடி பார்த்தார்.
அப்போது டாக்டரின் மனைவிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் வைத்திருந்த 90 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.. பீரோவிற்குள் வைத்திருந்த நகை எப்படி மாயமானது என்று தெரியாமல் தவித்துள்ளார் டாக்டரின் மனைவி. நகைகளை எல்லாம் யாரோ கொள்ளையடித்துள்ளார்கள் என்பதை கண்டுபிடித்த டாக்டர் பங்கஜ் குமார், உடனடியாக சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். பாண்டிபஜார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லப்பா வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்
வீட்டின் பீரோவிற்கு சாவி போட்டு திறந்தே கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் நெருக்கமானவர்களே திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரணையை போலீசார் தொடங்கினார்கள்.. போலீஸ் விசாரணையில் டாக்டர் பங்கஜ்குமார் வீட்டில் வேலை பார்த்து வந்த 22 வயதாகும் விஜயலட்சுமி என்ற பெண் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து பாண்டிபஜார் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய பின்னர், நகைகளை கொள்ளையடித்ததை விஜயலட்சுமி ஒப்புக் கொண்டார். அதன்பேரில் வேலைக்கார பெண் விஜயலட்சுமி நேற்று கைது செய்யப்பட்டார். திருடிய நகைகளை, நகைக்கடை ஒன்றில் விஜயலட்சுமி விற்பனை செய்திருக்கிறார். அதன் மூலம் வந்த பணத்தில் விஜயலட்சுமி ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
குறிப்பிட்ட நகைக்கடையில் இருந்து நகைகளை மீட்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளார்கள். இந்த வழக்கில் விஜயலட்சுமியின் உறவினரான 29 வயதாகும் வருண்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே திருட்டு நகைகளை வாங்கிய, நகைக்கடை அதிபர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இதனிடையே பீரோ அவ்வப்போது திறந்து கிடந்த நிலையில் அதில் உள்ள நகைகளை பார்த்ததும், விஜயலட்சுமிக்கு ஆசை ஏற்பட்டுள்ளதாம்.. கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications