சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் ஜிம் முருகன் கைது.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ளது ஃபெடரல் வங்கி. அங்கு நேற்று முன் தினம் நகைப் பிரிவில் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். இங்கு பொதுமக்களும் வங்கி சார்ந்த பணிகளுக்காக வருவதும் போவதுமாக இருந்தனர்.

அப்போது பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர் புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களை கத்திமுனையில் கட்டிப்போட்ட மர்மநபர்கள்,ரூ 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

 ரக்‌ஷாபந்தன் பண்டிகை.. சகோதரனை பார்க்க சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்.. பீகாரில் 4 பேர் வெறிச்செயல்! ரக்‌ஷாபந்தன் பண்டிகை.. சகோதரனை பார்க்க சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்.. பீகாரில் 4 பேர் வெறிச்செயல்!

விசாரணை

விசாரணை

இது குறித்து தகவலின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விடிய விடிய விசாரணை

விடிய விடிய விசாரணை

இந்த நிலையில் நேற்றுமுன் தினம் முதல் விடியவிடிய நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி ஊழியர் முருகன் என்பவர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. வங்கி காவலாளிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிகிறது. இந்த சம்பவத்தில் இன்னும் இருவருக்கும் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது.

6 தனிப்படைகள்

6 தனிப்படைகள்

இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் முருகனின் உறவினர் பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து செந்தில் முருகன், சந்தோஷ் ஆகியோரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

Recommended Video

    சென்னை வங்கி கொள்ளை.. வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்! கொள்ளையர்கள் தப்பியது இப்படி தான்
     முக்கிய குற்றவாளி கைது

    முக்கிய குற்றவாளி கைது


    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான முருகனை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் முருகனையும் போலீஸார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகையில் 18 கிலோவை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யாவை தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.

    English summary
    Special force arrested main accused Murugan in Arumbakkam bank robbery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X