உள்ளாட்சித் தேர்தல்... புலி வருது கதையாக உள்ளது... மக்கள் நீதி மய்யம் சாடல்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கடந்த மூன்றாண்டுகளாக ''புலி வருது புலி வருது'' என்ற கதையாக உள்ளது என மக்கள் நீதி மய்யம் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான குமரவேல் விடுத்துள்ள அறிக்கையில் அதிமுக, திமுக, ஆகிய இரண்டு கட்சிகளை சாடியுள்ளார்.
மேலும், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

மக்கள் பிரச்சனை
கடந்த 2016-ல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்றுவரை நடத்தப்படவில்லை என்றும், இதனால்அடிப்படை பிரச்சனைகளை கூட யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் குமரவேல் கூறியுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆளத்துடிக்கும் கட்சி
ஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாகவும், சுயநலத்துக்காக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத வண்ணம் அந்த இரண்டு கட்சிகளும் பார்த்துக்கொள்வதாகவும் குமரவேல் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளாக
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் கடந்த மூன்றாண்டுகளாக'' புலி வருது புலி வருது'' என்பது போல் தேர்தல் நடத்தப்போவதாகவும் அறிவிப்பதும், பின்னர் அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்துக்கு போவதும் என கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துவதாக கூறியுள்ளார்.

பாவனை
தேர்தல் நடத்தப்படுவதாக பாவனைக் காட்டி தனது கட்சிக்காரர்களிடம் விருப்பமனு பெறுவதும், மற்றொருபுறம் தேர்தலுக்கு தடை போட நீதிமன்ற வாசலில் நிற்பதும் தொடர்கதையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார் குமரவேல். இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த திமுக, அதிமுக, இப்போது கட்சிக்காரர்களையும் ஏமாற்றி வருவதாக சாடியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications