அன்பை தொற்ற வைப்போம்... மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம் - கமல் தீபாவளி வாழ்த்து
சென்னை: மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;
பெருந்தொற்று காலத்தில் வாழக்கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான்.

அன்றாட வாழ்க்கையை கொண்டாடுவோம்.
அன்பை தொற்ற வைப்போம்.
இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம்.
வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்.
மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம்.
இவ்வாறு கமல் தனது தீபாவளி வாழ்த்தை பகிர்ந்துள்ளார். கமல்ஹாசனை பொறுத்தவரை தன்னை பகுத்தறிவுவாதியாக, நாத்திகராக வெளிக்காட்டிக் கொள்பவர். அப்படிப்பட்ட கமலிடம் இருந்து தீபாவளி வாழ்த்து வெளியாகியிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
இதனிடையே தீபாவாளி வாழ்த்தை நேரடியாக சொல்லாமல் தனக்கே உரிய பாணியில் சுற்றி வளைத்து வழக்கம் போல் தமிழ் மனம் வீச டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் கமல்.












Click it and Unblock the Notifications