கமல்ஹாசன் கட்சிக்கு வந்த சோதனை! மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளரை கைது செய்த கர்நாடக போலீஸ்!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் சரவணன் என்பவரை பண மோசடி வழக்கில் கர்நாடக போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது.
சரவணனை பிடிப்பதற்காக மஃப்டியில் வந்திருந்த கர்நாடக போலீஸார், துப்பாக்கி முனையில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நீலகிரி,கோவையில் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்..தேனி, திண்டுக்கல், தென்காசி மக்களும் உஷார்
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் ஒருவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேலூர் மத்திய மாவட்டச் செயலாளராக இருப்பவர் சரவணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு பெற்று ஊருக்கு வந்தவர். குடியாத்தத்தில் சொந்தமாக ஸ்ரீநாராயணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்ததோடு கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் சில கொடுக்கல் வாங்கல் வைத்திருந்திருக்கிறார் சரவணன்.
கர்நாடக போலீஸ்
அதில் சிக்கல் எழுந்ததை தொடர்ந்து சரவணன் மீது பெங்களூர் போலீஸில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக பெங்களூரிலிருந்து 3 போலீஸார் மஃப்டியில் குடியாத்தம் வந்தனர். சரவணன் வழக்கம் போல் தனது டூவிலரில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்த போது அவரை மடக்கிய கர்நாடக போலீஸ் தங்களுடன் பெங்களூர் வருமாறு சரவணனை அழைத்துள்ளது.
சாலையில் சண்டை
ஆனால் அவர்களுடன் செல்ல மறுத்த சரவணன், சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளார். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் இது தொடர்பாக குடியாத்தம் போலீஸாருக்கு தகவல் கூறி வரவழைத்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் நடத்திய விசாரணையில், சரவணனை கைது செய்ய வந்திருப்பது பெங்களூர் போலீஸ் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கின் விவரத்தை கேட்டறிந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளரை பெங்களூர் போலீஸாருடன் அனுப்பி வைத்தது தமிழக போலீஸ்.
அரசியல் வட்டாரம்
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் ஒருவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.