ரயில்வேயில் வேலை... 4 பேரிடம் ஆசைக்காட்டி சுமார் ரூ.60 லட்சம் அபேஸ் செய்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(38). பொறியியல் பட்டதாரியான இவர் சரிவர வேலை கிடைக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ்(40) என்பவருடன் தங்கராஜுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது சுரேஷ் தென்னக ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.13 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

Man arrested for cheating Rs.60 lakh from 4 graduates to get Railway job

ஆனால் தங்கராஜுக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை வாங்கித் தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து சுரேஷிடம் தங்கராஜ் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். பணம் கிடைக்காததால் விரக்தியடைந்த தங்கராஜ், பணம் தராமல் சுரேஷ் தன்னை ஏமாற்றி தலைமுறைவாகிவிட்டதாகக் ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகாரளித்தார்.

இந்த புகாரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு அனுப்பிய காவல் ஆணையர் சந்தீப்ராய் உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Man arrested for cheating Rs.60 lakh from 4 graduates to get Railway job

இதில் சுரேஷ் தங்கராஜை மட்டுமின்றி, ஸ்ரீநாத், கார்த்திக்குமார், திருமல்லேஸ் ஆகிய பட்டதாரிகளிடமும் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 4 பேரிடமும் மொத்தம் ரூ.59.37 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த சுரேஷை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுரேஸ் நேற்று போலீசாரிடம் சிக்கனார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+