Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஈசிஆரில், ராங் சைடில் வந்து பெண் எஸ்ஐயிடம் 'ராங்' பேச்சு.. மறக்க முடியாத தண்டனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஈசிஆரில், ராங் சைடில் பைக்கில் வந்த ஆட்டோ ஓட்டுநரை பெண் எஸ்ஐ தடுத்துள்ளார். அவரை தடுத்து ஆபாசமாக பேசி மிரட்டியதால் கைது செய்தனர். கைதான ஆட்டோ டிரைவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீலாங்கரையில் ஒரு வாரத்திற்கு தினசரி காலை, மாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

சென்னையில் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வருவோரை படம்பிடிக்க தானியங்கி கேமராக்கள் உள்ளன. ஆனால் ராங் சைடில் வருவோரை போலீசார் பார்த்து, கண்டித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தான் நிலைமை உள்ளது. சிக்னலை மதிக்காமல் சென்றால் கண்டிப்பாக வீடு தேடி அபராதம் வரும்.

Chennai ECR Traffic

ஆனால் ராங் சைடில் சென்றால், போலீசாக பார்த்து தான் அபராதம் விதிப்பார்கள்.. மிகவும் நெருக்கடியான சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் ராங் சைடில் வந்தால் அவர்களை போலீசார் எச்சரித்து, நேராக செல்லுமாறு அறிவுறுத்துவார்கள்.

சென்னையில் ஈசிஆர் சாலையில் நீலாங்கரை பகுதியில் ராங்சைடில் வருவது அதிகமாக உள்ளது. இதேபோல் ஓஎம்ஆர் சாலையிலும் பல இடங்களில் சுற்றி செல்வதற்கு யோசித்து ராங் சைடில் வருவது அதிகமாக உள்ளது. ஈசிஆர் சாலையை பொறுத்தவரை ராங் சைடில் வருவதை கண்காணிக்க எப்போதும் போலீஸ் இருப்பார்கள்.

ஏனெனில் குறிப்பிட்ட நீலாங்கரை சாலை மிகவும் குறுகிய சாலை. இதனால் நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக போலீஸ் நிற்பார்கள். அப்படித்தான் அண்மையில் போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது வெட்டுவாங்கெணியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விவேக் என்பவர் சாலை விதியை மீறி வாகனம் இயக்கி வந்துள்ளார். அவரை அங்கு நின்றிருந்த பெண் எஸ்ஐ பிரியா தடுத்துள்ளார். மேலும் அவரிடம் பெண் எஸ்ஐ பிரியா விசாரணை மேற்கொண்டார்.

அப்போது எஸ்ஐ பிரியாவை ஆட்டோ டிரைவர் விவேக் ஆபாசமாக திட்டியுள்ளார். இதுகுறித்து உடனடியாக பிரியா புகாரளித்த நிலையில் டிரைவர் விவேக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட விவேக் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்துக்கு போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவேக்குக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் விவேக் ராங் சைடில் வந்து ராங்காக பேசிய நீலாங்கரையில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+