Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்னியின் செல்வன் 2.. மணிரத்னம், ஜெயமோகனின் “இந்துத்துவ” திணிப்பு - எழுத்தாளர் முருகவேள் காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் திரைப்படத்தில் இந்துத்துவ பார்வையை மணிரத்னமும் ஜெயமோகனும் திணித்து இருக்கிறார்கள் என்று எழுத்தாளர் இரா முருகவேள் விமர்சனம் செய்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வனை வரலாறு என்று நினைத்துக் கொள்ள போதுமான காரணங்கள் இருக்கின்றன. முதல் பாகத்தில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு அப்படியே கொடுக்கப் பட்டிருக்கும். தவிர சோழர் பாண்டியர் போர்கள், சோழர் ராட்டிற கூடர் போர்கள் ஆகியவை இடையிடையே வந்து கொண்டே இருக்கும். கைக் கோளப் படை, வேளை க்கார படை போன்ற வரலாற்று நிறுவனங்கள் இடம் பெறும்.

பிரச்சினை கல்கியில் இல்லை. உண்மை வரலாறு என்று தேடி நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டரத்தாருக்குப் போனாலும் சற்றேறக் குறைய இதேதான் இருக்கும். வரலாற்றை மன்னர்கள் வரிசையாக பார்க்கும் முறை இன்னும் மாறவில்லை. உற்பத்தி முறையில் இருந்து வரலாற்றை பார்க்கும் முறை இங்கே துண்டு துண்டாக உள்ளது. இன்னும் இவை முறையாகத் தொகுக்க பட்டு ஒழுங்கு படுத்தல் செய்யப்பட வில்லை.

உதாரணமாக சோழர் ஈழத்தின் மேல் படையெடுத்த தற்கு அங்கே உள்ள செருவி லா என்ற செம்புச் சுரங்கங்களை கைப்பற்றும் நோக்கமும் இருந்தது என்று கேமில் ஸ்வெலபில், பத்மா கைமல் ஆகியோர் கூறுகின்றனர். ஈழம் ஆகிரமிக்கப் பட்டு செம்பு தடையில்லாமல் கிடைத்தது நடராஜர் செப்புத் திருமேனிகள் முழு வடிவம் பெற உதவின என்கின்றனர் இவர்கள்.

போர்க்களங்களில் ஆடப்பட்ட கொற்றவை நடனம், அதன் உருவகமான உக்கிர கொற்றவை சிற்பங்கள் புதிதாக சைவத்துக்கு மாறிவந்த சமண உயர்குடிக்கு விளக்கத்தை தந்ததால் கொற்றவை உருவம் அழகே உருவான நடனமாடும் சிவனாக மாறியது என்பது இந்த ஆய்வுப்பள்ளியின் பார்வை. கைலாசபதி, வானமாமலை, கரோஷிமா, சாந்தலிங்கம், ராஜன், சிவ சுப்பிரமணியன் போன்றோரின் ஆய்வுகளே ஓரளவு சமூக வரலாற்றை கூறக் கூடியவை.

தென்னகத்தின் கப்பல் கட்டும் கலை, கோவிலுக்கும் அரசுக்கும் உள்ள உறவு ஆகியவை பற்றிப் பேசும் ரோமிலா தாப்பர் போன்றோரின் ஆய்வுகளும் உள்ளன. தமிழ் நாட்டின் வரலாற்றுப் பார்வை அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். அது தாமதம் ஆக ஆக பின்னடைவுதான் நடக்கும். கல்கி வந்த தூரத்தை கூட பின்னால் தள்ளும் ஜெயமோகன் போன்றவர்கள் முன்னால் வருவது நடந்தே தீரும்.

மந்தாகினி தேவி பழைய நினைவுகள் மறந்து வீர பாண்டியன் உடன் சேர்ந்து வாழ்ந்து கருவுற்றார் என்று கல்கி எழுதுகிறார். ஜெயமோகன் மணிரத்னம் குழு அந்த சுதந்திரத்தை கூட மந்தாகினிக்கு கொடுக்காமல் அதை ஏதோ சுந்தர சோழனை பழிவாங்க வீர பாண்டியன் செய்த பாலியல் வன்முறை என்கின்றனர்.

Mani Ratnam and Jayamohan imposed a Hindutva in Ponniyin Selvan 2 - Murugavel

இன்னொருவரை பெண்கள் மனதாலும் நினைக்க கூடாது என்ற இந்துத்துவ மன நிலையை அந்த பண்பாடு இல்லாத மீனவ பெண்கள் மீதும் திணிக்கின்றனர் பாருங்கள். மணிரத்னம் தனது மற்ற படங்களில் இந்த விஷயங்களை இப்படி பார்த்தது இல்லை. எல்லாம் சகவாச தோஷம். மொத்த வரலாற்றுக்கும் இதுதான் நடந்தது. இப்போதும் நடக்கிறது." என்று பதிவிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+