பொன்னியின் செல்வன் 2.. மணிரத்னம், ஜெயமோகனின் “இந்துத்துவ” திணிப்பு - எழுத்தாளர் முருகவேள் காட்டம்
சென்னை: கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் திரைப்படத்தில் இந்துத்துவ பார்வையை மணிரத்னமும் ஜெயமோகனும் திணித்து இருக்கிறார்கள் என்று எழுத்தாளர் இரா முருகவேள் விமர்சனம் செய்து இருக்கிறார்.
பொன்னியின் செல்வனை வரலாறு என்று நினைத்துக் கொள்ள போதுமான காரணங்கள் இருக்கின்றன. முதல் பாகத்தில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு அப்படியே கொடுக்கப் பட்டிருக்கும். தவிர சோழர் பாண்டியர் போர்கள், சோழர் ராட்டிற கூடர் போர்கள் ஆகியவை இடையிடையே வந்து கொண்டே இருக்கும். கைக் கோளப் படை, வேளை க்கார படை போன்ற வரலாற்று நிறுவனங்கள் இடம் பெறும்.
பிரச்சினை கல்கியில் இல்லை. உண்மை வரலாறு என்று தேடி நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டரத்தாருக்குப் போனாலும் சற்றேறக் குறைய இதேதான் இருக்கும். வரலாற்றை மன்னர்கள் வரிசையாக பார்க்கும் முறை இன்னும் மாறவில்லை. உற்பத்தி முறையில் இருந்து வரலாற்றை பார்க்கும் முறை இங்கே துண்டு துண்டாக உள்ளது. இன்னும் இவை முறையாகத் தொகுக்க பட்டு ஒழுங்கு படுத்தல் செய்யப்பட வில்லை.
உதாரணமாக சோழர் ஈழத்தின் மேல் படையெடுத்த தற்கு அங்கே உள்ள செருவி லா என்ற செம்புச் சுரங்கங்களை கைப்பற்றும் நோக்கமும் இருந்தது என்று கேமில் ஸ்வெலபில், பத்மா கைமல் ஆகியோர் கூறுகின்றனர். ஈழம் ஆகிரமிக்கப் பட்டு செம்பு தடையில்லாமல் கிடைத்தது நடராஜர் செப்புத் திருமேனிகள் முழு வடிவம் பெற உதவின என்கின்றனர் இவர்கள்.
போர்க்களங்களில் ஆடப்பட்ட கொற்றவை நடனம், அதன் உருவகமான உக்கிர கொற்றவை சிற்பங்கள் புதிதாக சைவத்துக்கு மாறிவந்த சமண உயர்குடிக்கு விளக்கத்தை தந்ததால் கொற்றவை உருவம் அழகே உருவான நடனமாடும் சிவனாக மாறியது என்பது இந்த ஆய்வுப்பள்ளியின் பார்வை. கைலாசபதி, வானமாமலை, கரோஷிமா, சாந்தலிங்கம், ராஜன், சிவ சுப்பிரமணியன் போன்றோரின் ஆய்வுகளே ஓரளவு சமூக வரலாற்றை கூறக் கூடியவை.
தென்னகத்தின் கப்பல் கட்டும் கலை, கோவிலுக்கும் அரசுக்கும் உள்ள உறவு ஆகியவை பற்றிப் பேசும் ரோமிலா தாப்பர் போன்றோரின் ஆய்வுகளும் உள்ளன. தமிழ் நாட்டின் வரலாற்றுப் பார்வை அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். அது தாமதம் ஆக ஆக பின்னடைவுதான் நடக்கும். கல்கி வந்த தூரத்தை கூட பின்னால் தள்ளும் ஜெயமோகன் போன்றவர்கள் முன்னால் வருவது நடந்தே தீரும்.
மந்தாகினி தேவி பழைய நினைவுகள் மறந்து வீர பாண்டியன் உடன் சேர்ந்து வாழ்ந்து கருவுற்றார் என்று கல்கி எழுதுகிறார். ஜெயமோகன் மணிரத்னம் குழு அந்த சுதந்திரத்தை கூட மந்தாகினிக்கு கொடுக்காமல் அதை ஏதோ சுந்தர சோழனை பழிவாங்க வீர பாண்டியன் செய்த பாலியல் வன்முறை என்கின்றனர்.

இன்னொருவரை பெண்கள் மனதாலும் நினைக்க கூடாது என்ற இந்துத்துவ மன நிலையை அந்த பண்பாடு இல்லாத மீனவ பெண்கள் மீதும் திணிக்கின்றனர் பாருங்கள். மணிரத்னம் தனது மற்ற படங்களில் இந்த விஷயங்களை இப்படி பார்த்தது இல்லை. எல்லாம் சகவாச தோஷம். மொத்த வரலாற்றுக்கும் இதுதான் நடந்தது. இப்போதும் நடக்கிறது." என்று பதிவிட்டு உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications