விஜயகாந்துக்கு மதுரையில் முழு உருவச்சிலை நிறுவ வேண்டும்! மேயர் இந்திராணிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மதுரையில் முழு உருவச் சிலை நிறுவ வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், மதுரையில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, அரசியலிலும், சினிமாவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்துக்கு மாமதுரையில் முழு உருவச் சிலை அமைத்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜயகாந்தின் உடலே இன்னும் நல்லடக்கம் செய்யப்படாத நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இத்தகைய கோரிக்கையை விடுத்து கவனம் ஈர்த்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனக்கு எழுதியுள்ள கடிதத்தின் மீது மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேயர் மட்டும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தலைவர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் என்றால் அது எளிதில் முடியக்கூடிய காரியமல்ல. எண்ணற்ற சிக்கல்களும், பிரச்சனைகளும் உள்ளன. விஜயகாந்தின் மீதான அன்பால் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இத்தகைய கோரிக்கையை வைத்துள்ளார். விஜயகாந்தின் உடலை வைக்க ராஜாஜி ஹாலை வழங்கி பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிலை நிறுவ வேண்டும் என மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே விஜயகாந்த் குடும்பத்தினர் கேட்காமலேயே அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications