சென்னையில் பதுங்கல்?.. போலீஸ் தேடும் நிலையில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் ஹைகோர்ட்டில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பதுங்கியுள்ளதாக கூறப்படும் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Recommended Video

    போலீஸ் தேடும் நிலையில் முன்ஜாமீன் கோரி Manikandan ஹைகோர்ட்டில் மனு

    துணை நடிகையும் மலேசிய தூதரக அலுவலகத்தில் பணியாற்றுபவருமான சாந்தினி தன்னுடன் மணிகண்டன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு 3 முறை கருக்கலைப்பு செய்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் மிரட்டி ஏமாற்றி வருவதாக புகார் அளித்தார்.

    Manikandan files anticipatory bail in Chandini case

    ராமநாதபுரத்தில் இவர் அளித்த புகாரை அடுத்து மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிகண்டனை தேடி ராமநாதபுரத்திற்கு தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.

    அவரது செல்போன் இரண்டும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருந்து வருகிறார். மணிகண்டனுக்கு நெருக்கமான நண்பர்கள் குறித்து போலீஸார் லிஸ்ட் எடுத்து வருகிறார்கள். அது போல் சாந்தினி சொன்ன மருத்துவமனையில் உண்மையிலேயே அவருக்கு கருக்கலைப்பு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணிகண்டன் சென்னையில் பதுங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+