Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த மாஸ்.. முதல்வர் ஸ்டாலின் 2வது நாள் பயணமாக இன்று அரியலூர் செல்கிறார்.. ரெடியாகும் புது திட்டம்

முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று அரியலூர் மாவட்டம் செல்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 2வது நாளான இன்று அரியலூர் மாவட்டம் செல்கிறார்.. அங்கு ஏராளமான நலத்திட்ட பணிகளையும் துவக்கி வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.. இதற்காக நேற்றைய தினம், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்தார்.

பிறகு, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 வானவில் மன்றம்

வானவில் மன்றம்

இதையடுத்து, நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்... பின்னர், அரசுப்பள்ளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்..

 அகழ்வாராய்ச்சி

அகழ்வாராய்ச்சி

இந்நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு முதல்வர் புறப்பட்டு சென்றார்.. அங்கு வேப்பந்தட்டை தாலுகா எறையூரில், சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை சென்ற முதல்வர், அங்கு அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. பின்னர், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை திறந்துவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்கு அமையவுள்ள தனியார் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்...

 புது புது திட்டங்கள்

புது புது திட்டங்கள்

இந்நிலையில், சுற்றுப்பயணத்தில் 2வது நாளாக, இன்று அரியலூர் மாவட்டம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. இன்று காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.. புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்..

ட்ரோன்ஸ்

ட்ரோன்ஸ்

அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காலை 10.45 மணியளவில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைகிறார். மதியம் 12.30 மணிக்கு செல்லும் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார் ஸ்டாலின்... முன்னதாக, முதல்வரின் இந்த வருகையையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் என 2 நாட்களுக்கும் ட்ரோன்கள் பறக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+