லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் மதிமுக.. கூட்டணி பேச குழு அமைப்பு.. தேர்தல் அறிக்கை குழுவும் தயார்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தைக்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் திமுக குழு அமைத்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளரும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலை திமுக கூட்டணியுடன் இணைந்து சந்திக்கிறது மதிமுக. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் லோக்சபா தேர்தல் தொகுதி உடன் பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குழு அமைத்துள்ளது. அந்த குழுவில் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர், மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர், ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர், வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மறுமலர்ச்சி திமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தி.மு.இராசேந்திரன் -கழகத் துணைப் பொதுச்செயலாளர், ஆ.வந்தியத்தேவன், கழக கொள்கை விளக்க அணி செயலாளர், வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் -கழக தணிக்கைக் குழு உறுப்பினர், ப.த.ஆசைத்தம்பி - கழக இளைஞரணி செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ இந்த இரண்டு குழுக்களில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications