மீனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2021: சம்பள உயர்வுடன் பதவி உயர்வு தேடி வரும் மாதம்
ஏப்ரல் மாதத்தில் கிரக மாற்றங்கள் அதிகம் உள்ளன. நவ கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தினால் மீன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது.
சென்னை: மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் பண வருமானத்துடன் பதவி உயர்வு தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி மீன ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மகரம் ஏப்ரல் மாத ராசி பலன் 2021: திடீர் பணவரவினால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்
குரு பெயர்ச்சியால் குதூகலம்
உங்க ராசிநாதன் குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் நுழைகிறார். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். திருமண சுப காரியம் ஏற்படும். அலுவலகத்தில் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வுடன் பதவி உயர்வு தேடி வரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.
செல்வாக்கு அதிகரிக்கும்
12ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் தொழில் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்கலாம். சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படும்.
குடும்ப வாழ்க்கையில் குதூகலம்
குடும்ப வாழ்க்கையில் குதூகலம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் தொடர்பாக திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெண்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.
பரிகாரம் என்ன
காது பிரச்சினை வரலாம் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் பேசும் போது கவனம் தேவை. சகோதர சகோதரிகளால் சில சங்கடங்கள் வரலாம் கவனம் தேவை. அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்பு நீங்கும். சிவ ஆலயத்தில் தேன் அபிஷேகம் செய்ய பிரச்சினைகள் நீங்கும்.