மண்டையை பிளக்கும் வெயில்.. தமிழகத்திற்கு இன்னைக்கு 3 டிகிரி எக்ஸ்ட்ரா இருக்கு! மக்களே கவனம் ப்ளீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவு வெயில் பதிவாகியிருந்த நிலையில், இன்று வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம். அடுத்த 6 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும்.

Meteorological Department warns that Tamil Nadu will be hotter than usual today

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி, 3 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. ஈரோடு, சேலம், கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மேல் வெயில் பதிவாகி உள்ளது. வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மோர், நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+