அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது -எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை..!
சென்னை: உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.
Recommended Video

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு 15 நாட்களாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை தொய்வடைந்தததை அடுத்து ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைகள் தொடர்கின்றன. மூத்த மருத்துவர்கள் குழு அமைச்சர் காமராஜ் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் நேற்றிரவு 10 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
இதனிடையே இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ள எம்.ஜி.எம். மருத்துவமனை, அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் தென்படுவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது திருவாரூர் மாவட்ட அதிமுகவினர் மற்றும் சக அமைச்சர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. நேற்றிரவு முதல அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து பதைபதைப்பில் இருந்து வந்த அவர்களுக்கு மருத்துவமனை அறிக்கை தெளிவை கொடுத்துள்ளது.
அமைச்சர் காமராஜுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் உடனிருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications