நள்ளிரவில் விஜய்க்கு ஷாக்.. போலி ஆதரவு கடிதம்! தூய சக்தி செய்யும் வேலையா இது? டிடிவி தினகரன் கோபம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தவெகவை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக எங்கள் எம்.எல்.ஏ பெயரில் போலி கடிதத்தினை தவெகவினர் ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளனர். ராவணைனை சீதை தூக்குவது போல் எங்கள் எம்.எல்.ஏவை தூக்கியுள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு முன்பே இப்படியா, இது தான் தூய சக்தியா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்து இருப்பதாகவும் கூறியுள்ளார். எல்லா ஆதரவு கடிதங்களையும் ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது போன்ற மோசடியாளரக்ளை ஆட்சி அமைக்க சொன்னால் என்ன ஆகும். யாருடைய பெயரிலும் மோசடி செய்துவிடுவர். தூய சக்தி செய்யும் வேலையா இது.. இவர்களை நம்பி ஆட்சி ஒப்படைத்தால் என்ன ஆகும்? காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் கொடுக்க இருக்கிறேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications