Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா! ஆவின் பச்சை பால் நிறுத்தும் நேரத்தில் விலை குறைந்த ‘ஆரோக்யா’.. அலாரம் அடிக்கும் பால் முகவர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹட்சன் நிறுவனத்தின் நிலைப்படுத்தப்பட்ட 4.5% கொழுப்பு சத்துள்ள பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் வேறு வழியின்றி பொதுமக்கள் தனியாருக்கு செல்வார்கள் என பால் முகவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

Milk agents warns government that public will have no choice but to go private

தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில நாட்ககளுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்த ஆய்வறிக்கை என்றும் ஒரு பதிவை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ஆவின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில், ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்பு சத்து உள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்த பால் விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் விற்பனை 40 சதவீதம். 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாகவும் இது உள்ளது. வருவாய் இழப்பால் இந்த பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக, 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட 'டிலைட்' ஊதா நிற பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்யா பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் பால் பாக்கெட்களில் ஆரோக்யாவும் முதன்மையானது. ஆவின் பால் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், ஆரோக்யா பால் விலை குறைக்கப்பட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் தனியார் பாலை நோக்கிச் செல்வார்கள் என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "4.5% கொழுப்பு சத்துள்ள ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) உற்பத்தி மற்றும் விற்பனையை நவம்பர் 25ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 3.5% கொழுப்பு சத்துள்ள ஆவின் டிலைட் பாலினை அதே விற்பனை விலைக்கு விநியோகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான (ஆரோக்யா) ஹட்சன் 25.11.2023 முதல் 4.5% கொழுப்பு கொழுப்பு சத்துள்ள அவ்வகை பாலுக்கு லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் ஒரு கிலோவுக்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் பாலுக்கான கொள்முதல் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இந்த விற்பனை விலை குறைப்பை அமல்படுத்த இருப்பதாகவும் வருகின்ற தகவலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது. அதே சமயம் இந்த தருணத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தவறான தகவலை தெரிவித்து வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது.

மேலும் ஹட்சன் நிறுவனத்தின் நிலைப்படுத்தப்பட்ட 4.5% கொழுப்பு சத்துள்ள பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைப்பை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் வேறு வழியின்றி பொதுமக்கள் தனியாருக்கு செல்ல இது ஏதுவாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+