கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது என்ன?
சென்னை : தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறப்பு தேதியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பள்ளிகள் திறப்பு தேதியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை. 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
அதேபோல, 12-ஆம் வகுப்பிற்கு ஜூன் 20-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பிற்கு ஜூன் 27-ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும். இதுவரை எந்த மாற்றமும் இல்லை. பொதுவாக மாற்றங்கள் எதுவும் வருகிறது, ஊரடங்கு வருகிறது, மாஸ்க் கட்டாயம் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். முதல்வர் தான் மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து இதுதொடர்பான முடிவை எடுப்பார். முதல்வரின் உத்தரவை பின்பற்றுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications