Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 முறை பார்த்தீங்களே ஒரு முறையாவது சொன்னீங்களா? ஜூனியர் எம்.எல்.ஏ.வை கலாய்த்த துரைமுருகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஜூனியர் எம்.எல்.ஏ.வான ஈ.ராஜாவை மூத்த அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் கலாய்த்த நிகழ்வு உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அமைச்சர் துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் தக் லைஃப் பதில் கொடுத்து சபையை கலகலப்பாக வைத்துக் கொண்டார்.

நேற்று போர்க்களமாக காட்சியளித்த தமிழக சட்டசபை இன்று அமைதியான முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஈ.ராஜா, குருவிக்குளம் யூனியன் ஆலமநாயக்கன்பட்டி கிராமத்தில் குளத்தின் தடுப்புச் சுவர் உடைந்து தண்ணீர் வீணாவதாகவும் மணம் மூட்டைகளை கொண்டு கரை அமைக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை எனவும் கூறினார். மேலும், கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியால் குளத்தில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டதாக தெரிவித்தார்.

100 முறை பார்த்தார்

100 முறை பார்த்தார்

கடந்தாண்டு பெய்த கனமழையால் குளத்தின் தடுப்புச் சுவர் உடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரி செய்து கொடுக்க முடியுமா என பேரவை தலைவர் வாயிலாக அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அமர்ந்தார் ஈ.ராஜா. அதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் துரைமுருகன் தக் லைஃப் பதில் கொடுத்து கவனம் ஈர்த்தார். ''சட்டமன்ற உறுப்பினர் 100 முறையாவது என்னை பார்த்திருப்பார், ஆனால் ஒரு முறை கூட இதைப்பற்றி சொல்லவில்லை.''

 கலாய்த்த துரைமுருகன்

கலாய்த்த துரைமுருகன்

''என்னிடம் இது பற்றி சொல்லியிருந்தால் அப்போதே உடனடியாக உத்தரவிட்டு தண்ணீர் வீணாவதை தடுத்திருப்பேன்'' எனத் தெரிவித்தார். இதன் மூலம் ஜூனியர் எம்.எல்.ஏ.வான ஈ.ராஜாவை துரைமுருகன் கலாய்த்ததோடு மட்டுமல்லாமல், கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட வேண்டிய அளவுக்கு இது பெரிய பிரச்சனை இல்லை என்பதையும் இது போன்ற சிறிய கோரிக்கைகளை எல்லாம் தன்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினாலே அதை செய்து கொடுத்துவிடுவேன் எனவும் எல்லா உறுப்பினர்களுக்கும் சூசகமாக பாடம் எடுத்திருக்கிறார்.

பேரவையில் சிரிப்பு

பேரவையில் சிரிப்பு

சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா கேள்விக்கு ஒரே வரியில் நச்சென்று பதிலளித்ததோடு, ஒரு வருடமாக இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்பதையும் பேரவையில் வைத்தே உறுப்பினருக்கு மறைமுகமாக பதில் கேள்வி எழுப்பி தனது சாதுர்யத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் துரைமுருகன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+