எடுத்தோம் கவிழ்த்தோம்ணு செஞ்சுட முடியாது, '3 எம்எல்ஏக்கள்' நோட்டீஸ் பற்றி ஜெயக்குமார் அடடே விளக்கம்
சென்னை: உரிய தருணம் வந்ததால்தான் ஓன்றரை வருடங்கள் கழித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், "முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திட்டதட்ட ஒன்றறை வருடங்கள், ஆதாரங்களாக வீடியோ கலெக்சன்கள், ஆடியோ கலெக்சன்கள் எடுத்து சபாநாயகரிடம் கொறடா கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் மூன்று எம்எல்ஏக்களுக்கு (கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி) விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்தியாவில் கட்சி தாவல் தடை சட்டப்படி, கட்சிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே அந்த அடிப்படையில் கொறடா புகார் கொடுத்துள்ளார். இது குறித்து பேரவை தலைவரின் அதிகாரத்துக்கு உள்பட்டு வருவதால், நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்றார்,
நீண்ட நாள்களுக்கு முன்பு அமமுகவுடன் இருந்தததாக கூறப்படும் விவகாரத்தில் இப்போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "உடனே எடுத்தோம் கழித்தோம் என்று எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதற்கு என்று உரிய தருணம் இருக்கிறது.
உரிய தருணம் என்றால் எல்லாவிதமான ஆதாரங்களும் வேண்டும். அப்படி ஆதாரங்களை சேகரித்த பின்பு தான் கொறடா புகார் கொடுத்ததாக கூறியிருக்கிறார். எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என நடவடிக்கை கூடாது என்பதால்தான் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3பேரும் விளக்கம் அளித்த பிறகு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார்" இவ்வாறு கூறினார்.
-
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications