தேமுதிக கூட்டணியா? இன்னும் பேசிட்டே தான் இருக்கோம்.. ஸ்ருதி குறைந்து போன அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, அது குறித்து கட்சி தலைமை அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
70 பொருட்களுக்கு வரி விதிப்பை குறைக்கவும், வரி விலக்கு பெறவும் வலியுறுத்த இருக்கிறோம். தீப்பெட்டிக்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை 12 சதவீதமாக குறைக்கவும், ரியல் எஸ்டேட் துறையில் மலிவான விலையில் வீடுகள் வாங்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கவும் வலியுறுத்த உள்ளோம்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்பது மிகவும் ரகசியமானது. தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையிலும் அமையும்.
தேர்தல் கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது குறித்து கட்சி தலைமை அதிகார பூர்வமான அறிவிப்வை விரைவில் வெளியிடும் என்று கூறினார்.