அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு.. ஜெயக்குமார் பேசுவதை பார்த்தால் என்ன நடக்குமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு வரும் சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்படியே சென்றாலும் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    சென்னை: ஜெ. நினைவிடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்… போயஸ் நினைவில்லத்திலும் பலத்த பாதுகாப்பு!

    சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனாவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கடந்த 31 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அப்போது அதிமுக கொடி கட்டப்பட்ட ஜெயலலிதாவின் காரில் அவர் பயணம் செய்தார். இது சட்டவிரோதம் என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என டிடிவி தினகரன் ஏற்கெனவே கூறியிருந்தது அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    அதிமுக கொடி

    அதிமுக கொடி

    இந்த நிலையில் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம் என அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். இந்த நிலையில் சசிகலா நாளை சென்னை திரும்புவதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மெரினா

    மெரினா

    அது போல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், மெரினாவில் உள்ள நினைவிடங்களில் போலீஸார் கூடுதல் பணியில் இருக்கிறார்கள். மேலும் ஆங்காங்கே பேரிகாடுகள் வைத்தும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு ஆதரவாக பேனர்களை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    நாளை தமிழகம் வரும் சசிகலா நேராக அதிமுக அலுவலகத்திற்கு செல்வாரா என அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் சசிகலா அதிமுக அலுவலகத்திற்கு சென்றால் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சசிகலா

    சசிகலா

    இதனிடையே பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், நாளை சசிகலா தமிழகம் வருவது உறுதி. அதிமுகவை மீட்டெடுக்கும் சட்ட போராட்டத்தில் சசிகலா தொடர்ந்து போராடுவார் என்று தெரிவித்தார். எனவே நாளை முதல் அதிமுகவில் ஒரு பெரிய பிரளயமே ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+