இறங்கி அடிக்கும் ஸ்டாலின்.. "ஸ்ட்ரைட்டா களத்துக்கே வந்து நிரூபித்தார்".. புகழ்ந்து தள்ளிய அமைச்சர்
: முதல்வரை அமைச்சர் பெரிய கருப்பன் புகழ்ந்து பேசியுள்ளார்
சென்னை: "முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்து மேற்கொண்ட நடவடிக்கையால், உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 50 சதவீதமாக குறைந்துள்ளது. கோட்டையில் இருந்து உத்தரவு போடாமல், நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்" என்று
திருப்பூரில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் சொன்னதாவது:
நகரங்களைவிட கிராமங்களில் தொற்று அதிகமாக பரவுவதால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 3 நாளாக சிறப்பு கவனம் செலுத்துகிறோம்.

பேட்டி
நோய் பாதித்தோரை வகைப்படுத்தி, முறைப்படுத்தி சிகிச்சை வழங்குவதால், நோயிலிருந்து விரைவாக குணமாகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளும், அருகில் உள்ள நகருடன் தொடர்பில் இருப்பதால், தொற்று ஏற்படுகிறது. தொடர் நடவடிக்கையால், 3 ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட கொரோனா நோய் தொற்று இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

மாவட்டம்
அதேபோல, அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை திகழும்... முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்றியதால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் ஊரகப்பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருப்பதால்தான் முதல்வர் செயலர்களை அனுப்பியுள்ளார். மருத்துவமனைகளுக்குத் தேவையான டாக்டர்கள், நர்ஸ்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

பாதிப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்து மேற்கொண்ட நடவடிக்கையால், உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 50 சதவீதமாக குறைந்துள்ளது. கோட்டையில் இருந்து உத்தரவு போடாமல், நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.. அதிலும், பாதுகாப்பு கவசம் அணிந்து, தொற்று நோயாளிகளை சந்திக்க சென்றதில், அவரது மனிதநேயம் வெளிப்படுகிறது..!

அமைச்சர்கள்
கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனம் செய்கிறார்கள்... ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் 2 முறை கோவை மாவட்டத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்றால் நாமும் ஏரியில் போய் தெர்மாகோல்தான் விடணும்" என்றார்.
-
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications