ஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்
முக ஸ்டாலினை மீண்டும் விமர்சித்து பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி
சென்னை: "மழை வருது, புயல் வருது, வெள்ளம் வருதுன்னு தெரியுது இல்லை? அதுக்கு தேவையான நடவடிக்கைகளை ஸ்டாலின் முதல்லயே எடுக்கணும் இல்லை? ஆனால், முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியில், அணைக்கட்டில் கொட்டும் மழையில் நனைஞ்சிக்கிட்டு நிக்கிறார் என்று தெரிந்ததும், ஓடோடி சென்று பார்வையிடுவது சேவை கிடையாது" என்று திமுக தலைவரை மறுபடியும் சீண்டி வம்பிழுத்து பேட்டி தந்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, புயல் வெள்ள பாதிப்பில் தமிழக அரசு செய்த நடவடிக்கைகள் குறித்து சிலாகித்து பேசினார்.. ஆனால், அப்போதும் மறக்காமல் முக ஸ்டாலினை விமர்சித்துவிட்டுதான் நகர்ந்தார்.

அப்போது அவர் பேசியதாவது: "ஆவின் பால் புயல் பாதித்த பகுதிக்கு தங்கு தடையின்றி கிடைத்துள்ளது... ஆவின் பாலை வெள்ளம் பாதித்த பகுதிகளில் எல்லாருக்கும் விநியோகித்து வருகிறோம்.
அதனால் புயலைப் பொறுத்தமட்டில் வரும் முன் காப்போம் என்ற முறையில் எடப்பாடியார் எடுத்திருக்கும் நடவடிக்கை எல்லாரும் பாராட்டுகிறார்கள். தானே குடையை பிடித்து, சொட்ட சொட்ட நனைந்து கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியை பார்த்து மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்து தரும் ஒரு முதல்வராக எடப்பாடியார் இருக்கிறார்..
ஆனால், ஸ்டாலினும் பார்வையிட வந்தார்? அவர் எப்படி வந்தார்? போர்க்கவசம்போல, பாதுகாப்பு டிரஸ்ஸூடன் வந்தார்.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட யார் வந்தாலும் நாங்க பாராட்டதான் செய்வோம்.. ஆனால் எடப்பாடியார் களத்துக்கு போய்ட்டாரு என்று தெரிந்தவுடன், பேரிடர் நிவாரண குழுவுடன் செயல்படுகிறார் என்று தெரிந்தவுடன், பார்வையிட ஸ்டாலின் வர்றார்.. பிறரை பார்த்து வருவது சேவை இல்லை.. தானா வருவது தான் சேவை..
மழை வருது, புயல் வருது, வெள்ளம் வருதுன்னு தெரியுது இல்லை? அதுக்கு தேவையான நடவடிக்கைகளை முதல்லயே எடுக்கணும்.. முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியில், அணைக்கட்டில் கொட்டும் மழையில் நனைஞ்சிக்கிட்டு நிக்கிறார் என்று தெரிந்ததும், ஓடோடி சென்று பார்வையிடுவது சேவை கிடையாது.
தேர்தலுக்கு இன்னைக்கு அவருக்கு தேவை இருக்கு.. அதனால போயிருக்கார். இந்த ஆட்சியின் சிறப்பை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. யார் உண்மையாக சேவை செய்கிறார்கள்? யார் நடிக்கிறார்கள் என்பதை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடியை மக்கள் தருவார்கள்" என்றார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications